போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

Date:

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலிப் நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காகவே சந்தேகநபர்கள் இப்போலிப் நாணயத்தாள்களைக் கொண்டுவந்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமையவே அவர்கள் கைது செய்யப்பட்டதாக முழங்காவில் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (08) இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பூநகரி மற்றும் நாச்சிக்குடா பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 61 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் முழங்காவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜைச் சேர்ந்​தவர் பல்​லவி சிங் ராஜ்புத். இவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்