ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

Date:

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்முனை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர் அன்சார் முஹம்மட் சினான் பெற்றுக்கொண்டுள்ளார்.

சாரணர் இயக்கத்தில் சிறப்பான ஈடுபாடு, தலைமைத்துவத் திறன், சமூக சேவை மற்றும் பல்வேறு செயற்பாடுகளில் தொடர்ச்சியான பங்களிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அன்சார் முஹம்மட் சினான், USF ஸ்ரீலங்கா அமைப்பின் செயற்பாட்டாளராகவும், YMMA சாய்ந்தமருது கிளையின் இளைஞர் விருது மற்றும் பயிற்சிப் பிரிவுத் தலைவராகவும் சமூக மற்றும் இளைஞர் மேம்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

சாய்ந்தமருதிற்கு பெருமை சேர்த்துள்ள இளம் சாரணரின் இச்சாதனைக்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மூக்குடைபட்ட விஜய் அரசு: உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தஞ்சையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் முதல்வர் விஜய் குறித்தும், பெண்கள் குறித்தும்...

சுவாமி விபுலானந்தர் கலாச்சார மண்டபத்தில் மாணவர்களுக்கு பரீட்சை செயலமர்வு

காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்