MSC Elsa 3 கப்பல் விபத்து: கடலில் சிந்திய பிளாஸ்டிக் துகள்களில் 43-க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் சேகரிப்பு

Date:

கேரளக் கடற்கரைக்கு அருகே மூழ்கிய MSC Elsa 3 கப்பலிலிருந்து கடலில் சிந்தி கரையொதுங்கிய பிளாஸ்டிக் துகள்களில் (Plastic Pellets) இதுவரை 43-க்கும் மேற்பட்ட கொள்கலன்களுக்கு இணையான அளவு சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) தெரிவித்துள்ளது.

MEPA தலைவர் சமந்த குணசேகர தெரிவிக்கையில், யாழ்ப்பாணத் தீவுகளிலிருந்து காலி வரை உள்ள கடற்கரைகளில் பிளாஸ்டிக் துகள்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருவதாகவும், தென்மேற்கு பருவமழை காரணமாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் கூறினார்.

இந்த பிளாஸ்டிக் துகள்களை அகற்றுவதற்காக சுமார் 1,800 தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கான அனைத்து செலவுகளையும் சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கப்பல் மூழ்கியதால் இலங்கையின் கடல் சூழலமைப்பிற்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டு தொகையை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவும் நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியதாக MEPA தலைவர் தெரிவித்தார்.

லைபீரியக் கொடியுடன் பயணித்த MSC Elsa 3 என்ற கொள்கலன் கப்பல், 2025 மே 25 அன்று இந்தியாவின் கேரளக் கடற்கரையிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தபோது நீர் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மூழ்கியது. சம்பவம் நிகழ்ந்தபோது அந்தக் கப்பலில் 643 கொள்கலன்கள் இருந்தன.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்