ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

Date:

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு

போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் பயன்பாட்டு உள்கட்டமைப்புகள் இலக்காக்கப்பட்டதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. பாலங்கள், தொடருந்து நிலையம் மற்றும் விமான நிலையம் தாக்கப்பட்டதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், அமெரிக்கா இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. தாங்கள் ஈரானின் இராணுவ இலக்குகள் மற்றும் இராணுவ தளவாட வசதிகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது. மறுபுறம், அமெரிக்கத் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஓமான், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்க நலன்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து கவலை வெளியிட்டுள்ளதுடன், பதற்றத்தை குறைத்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு இரு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்