நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் உயிரிழந்த காவலர்களிற்கு நடந்த கொடூர சித்திரவதை: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!

Date:

நீர்கொழும்பு சிறையில் நடந்த கலவரத்தில் உயிரிழந்த சிறை உத்தியோகத்தர்கள் கொடூரமான தாக்குதல்களாலும், 14 கைதிகள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களாலும் உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனைகள் வெளிப்படுத்தியுள்ளன.

5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறையைச் சுற்றி நடந்த மோதல்களில் உயிரிழந்த 24 பேருக்கு நீர்கொழும்பு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

7 உத்தியோகத்தர்கள் மற்றும் 17 கைதிகளுக்கு பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 14 கைதிகள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களாலும், மீதமுள்ள 3 கைதிகள் தாக்குதல்களாலும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 7 உத்தியோகத்தர்களும் கொடூரமான தாக்குதல்களால் உயிரிழந்தனர்.

இரு நாட்களிலும் நடந்த மோதல்களில் உயிரிழந்த 28 பேரின் உடல்கள் நீர்கொழும்பு மருத்துவமனையில் இருந்தன. மேலும் 4 உடல்களுக்கு பிரேதப் பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அவையும் கைதிகளுடையவை. ஒரு இந்தியரின் உடலும் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 8ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் மரணமடைந்த சிறைக் காவலர் தொடர்பான உண்மைகள் மாளிககந்த நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, சாட்சிய விசாரணை நேற்று (9) நிறைவடைந்தது.

நீர்கொழும்பு மருத்துவமனையில் மரணமடைந்த 28 பேரில் 24 பேரின் பிரேதப் பரிசோதனைகள் நிறைவடைந்து, உடல்கள் முற்பகல் (8) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சிறை உத்தியோகத்தர்களின் பிரேதப் பரிசோதனையின் போது, ​​அவர்களின் மலக்குடலில் துடைப்பக் கைப்பிடிகள் கண்டெடுக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டன.

நீர்கொழும்பு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைகளை நடத்துவதற்காக ஐந்து தடயவியல் மருத்துவர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவில், நீர்கொழும்பு மருத்துவமனையின் டொக்டர் சுஜீவ விக்ரமநாயக்க, புத்தளம் மருத்துவமனையின் டொக்டர் பிரசன்ன அப்புஹாமி, முல்லேரியாவ மருத்துவமனையின் டொக்டர் சமந்தா விஜேரத்ன, வத்துப்பிட்டிவல மருத்துவமனையின் டொக்டர் சமிந்த ராஜபக்ஷ மற்றும் ராகம மருத்துவமனையின் டொக்டர் ரமேஷ் அழகியவன்ன ஆகியோர் உள்ளனர்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலில் உயிரிழந்த 8 சிறை  உத்தியோகத்தர்கள் மற்றும் 21 கைதிகளின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்து, அதன் அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா (07) அன்று நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் சிறப்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி டபிள்யூ.எஸ்.ஆர். விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக அதே நாளில் நீதிமன்றத்தில் ஒரு விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கும் நீதவான் உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

பெண்களுக்காக யாழ் பல்கலையின் முன் விழிப்புணர்வு நடவடிக்கையில் வெளிநாட்டவர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுழைவாயிலில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் வியாழக்கிழமை சமூக விழிப்புணர்வு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்