பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

Date:

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில், அக்குரெஸ்ஸ பிரதேச செயலாளர் ஓட்டி வந்ததாகக் கூறப்படும் உத்தியோகப்பூர்வ வாகனம மோதியதில் 40 வயதுப் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக மாத்தறை தலைமையக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து, 27ஆம் திகதி மாலை சுமார் 4.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. வீதியைக் கடந்து சென்ற அப்பெண், அருகிலுள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளார்.

விபத்தில் காயமடைந்த பெண், தெனியாயவைச் சேர்ந்த சின்னசாமி ரோஸ்மேரி என்ற 40 வயதுப் பெண் ஆவார். இவர் மாத்தறை பொது மருத்துவமனையில் தனியார் உதவியாளராகப் பணிபுரிகிறார்.

அந்த வேலையில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு அவர் மிகவும் சிரமப்பட்டு தனது குடும்பத்தை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் அவரது கால் மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது மாத்தறை பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விபத்து தொடர்பாக அக்குரெஸ்ஸ பிரதேச செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்