நீதித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்துமாறு கோரி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரேரணையில் கையெழுத்திடத் தொடங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தப் பிரேரணை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 83(1)-ன் கீழ் முன்வைக்கப்பட உள்ளது.
நீதித்துறையின் முக்கிய உயர் பதவிகளுக்கான நியமனங்கள் தாமதமடைந்து வருவது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தி, அதற்கான விளக்கத்தையும் உடனடி நடவடிக்கைகளையும் அரசிடம் கோருவதே இந்தப் பிரேரணையின் நோக்கமாகும்.




