போதைப்பொருளுடன் சிக்கிய மொடல் அழகி

Date:

தாய்லாந்தில் இருந்து மும்பை வந்திறங்கிய 28 வயது மாடல் அழகி ஒருவர், 11 கிலோவுக்கும் அதிகமான உயர்தர கஞ்சா கடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கேரளாவை சேர்ந்த மாடல் அழகி ஹர்ஷா சன்னி. இவர் ‘மிசஸ் கேரளா’ 2025 போட்டியில் பங்கேற்றவர் ஆவார். இந்நிலையில் ஹர்ஷா சன்னி, தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் முலம் கடந்த புதன்கிழமை நள்ளிரவு மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கினார்.

அப்போது அவரது நடத்தை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால் விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பிறகு அவரது டிராலி பையை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் “பச்சை நிறப் பொருள்” நிறைந்த 12 சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து என்டிபிஎஸ் கருவியை பயன்படுத்தி நடத்தப்பட்ட ரசாயனப் பரிசோதனையில், அது உயர்தர ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ என்பது உறுதியானது.

11 கிலோவுக்கும் அதிக எடையுள்ள இந்த உயர்தர கஞ்சாவின் மதிப்பு ரூ.11.82 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹர்ஷா சன்னி, மும்பை ஃபோர்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்த போதைப்பொருள் யாருக்கு விநியோகம் செய்யப்பட இருந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

உயர் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.5,000 மாதாந்திர கொடுப்பனவு

மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்திர ரூ.5,000 கொடுப்பனவு வழங்கும் திட்டம் நடைமுறைக்கு...

Kennedy Center-ல் இருந்து Trump பெயர் அகற்றம்; Court Order-க்கு இணங்க அதிகாலை நடவடிக்கை

Kennedy Center-இல் இருந்து Trump பெயர் அகற்றம்; நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க...

கல்வி எந்த நெருக்கடியிலும் பாதுகாக்கப்படும் – பிரதமர் உறுதி

எந்தவொரு உலகளாவிய நெருக்கடியும் ஏற்பட்டாலும் கல்வித் துறையை பாதுகாப்பதில் அரசு உறுதியாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்