டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

Date:

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்கு விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இன்றைய தினம் (12) கொழும்பு மாவட்டச் செயலகத்தில் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் சுமார் 39,100 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அதில் 25.8 சதவீதம் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய டெங்கு பரவலுக்கு காரணமாக பரவி வரும் வைரஸின் தன்மையும், பொதுமக்களிடையே போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அண்மையில் பெய்த கடும் மழையும் டெங்கு பரவலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, கொழும்பு மாவட்டம் டெங்கு பரவலுக்கான உயர் அபாய மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொசு பெருக்கிடங்களை ஒழிக்கும் நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சுகாதார கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்