பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி இளைஞன் சங்கீத்சனை பிணையில் விடுவிக்குமாறு கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சங்கீத்சன் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை, சங்கீத்சனின் கைதின் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் கே.சயந்தன் தெரிவித்தார்.




