சுரேஷ் சாலேவின் பிணை மனு ஒத்திவைப்பு

Date:

குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்  பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவைச் செல்லாததாக்கக் கோரி, முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலே தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு மீதான மேலதிக வாதங்களைப் பரிசீலிப்பதை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஜூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

நீதிபதிகள் ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சாலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தம் இலங்கைக்குள் எவ்வாறு செயல்பட்டது என்பதை விவரித்து நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாதங்களைக் கேட்ட பின்னர், மேலதிக வாதங்களுக்காக இந்த வழக்கை ஜூலை 10 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்