ஹோர்முஸ் அருகில் விழுந்த அமெரிக்க ஹெலிகொப்டரில் இருந்த விமானிகள் பாதுகாப்பாக உள்ளனர்

Date:

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே விழுந்த அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகொப்டரின் விமானிகள் “நலமாக உள்ளனர்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தெரிவித்தார்.

வாஷிங்டன், டி.சி.க்குத் திரும்புவதற்கு முன்பு ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் பேசிய டிரம்ப், “யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று கூறினார்.

செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிடும் என்றும் அவர் மேலும் கூறினார்.

திங்கட்கிழமை ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகொப்டர் ஒன்று விழுந்ததாகவும், அதன் இரண்டு பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த இருவரை மேற்கோள் காட்டி நியூயோர்க் டைம்ஸ் திங்கள்கிழமை பிற்பகுதியில் செய்தி வெளியிட்டது.

அந்த அப்பாச்சி ஹெலிகொப்டர் ஈரானியத் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டதா, இயந்திரக் கோளாறு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சிக்கலைச் சந்தித்ததா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த அறிக்கை கூறியது.

ரொய்ட்டர்ஸின் கருத்துக்கான கோரிக்கைகளுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறையும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜூலை , நினைவேந்தல் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி மாபெரும் கவனயீர்ப்பு

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து...

திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு 4 பேர் படுகாயம்

திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில்; முச்சக்கர வண்டி...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்