புத்தூர் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

Date:

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன், வீதியின் குறுக்கே திடீரென நுழைந்த முச்சக்கர வண்டி மோதி இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

இதன்போது முச்சக்கர வண்டியின் மீது டிப்பர் வாகனம் ஏறியதில், அதில் பயணித்த மூன்று இளைஞர்களின் கால்களும் நசுங்கி அவர்கள் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் புத்தூரைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் வியாபாரத்துக்காக கஞ்சா கடத்தி சென்ற...

ஜூன் 8-10 நுளம்பு கட்டுப்பாட்டுத் திட்டம்

14 மாவட்டங்களில் உள்ள 72 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகளில்,...

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் தவெகவில் ஐக்கியம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்