வவுனியாவில் மாணவர்களுக்கிடையே மோதல்: 2 பேர் வைத்தியசாலையில்!

Date:

வவுனியா இரட்டைப்பெரியகுளம் பகுதியில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த மோதல் நடந்ததாகவும், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதாகவும் பொலிசார் கூறுகின்றனர்.

பாடசாலை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த இரண்டு மாணவர் குழுக்களுக்கும் இடையில் கடந்த மார்ச் மாதம் மடுகந்த பிரதேசத்தில் முதலாவது மோதல் இடம்பெற்றுள்ளது. கிரிக்கெட் மட்டை தொடர்பான பிரச்சினையே முதல் மோதலுக்கு வழிவகுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்பின், கடந்த 31ம் திகதி இரட்டைபெரியகுளம் பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே ஏற்பட்ட மோதலில், தாக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் ஏழு மாணவர்கள் ஈடுபட்டதாகவும் அவர்களில் நால்வர் நேற்று (03ஆம் திகதி) இரட்டைபெரியகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்