செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று வரை
283 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 279 மனித என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 16ஆம் நாள் அகழ்வு பணிகள் நடைபெற்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.




