எழுச்சி பாடலை பாடினார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் சொல்லிசை பாடகர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நபரை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.




