களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் வெட்டுவக்கடே, முஸ்லிம் மசூதி வீதி பகுதியில் இன்று காலை (28) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தார்.
இன்று (28) காலை சுமார் 8.55 மணியளவில் காரில் வந்த ஒரு கும்பல், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவரைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர், களுத்துறை தெற்கு, மரிக்கர் வீதி பகுதியைச் சேர்ந்தவர்.
களுத்துறை தெற்கு பொலிஸ் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.




