தூசணம் கதைத்த சிறுவனின் வாயில் சூடு வைத்த தந்தை

Date:

மட்டு முறக்கொட்டான்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக ஆசிரியர் பெற்றோரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த சிறுவனான மகனுக்கு வாயில் குறுக்கால் கம்பியால் சூடு வைத்த தந்தையாரை இன்று வியாழக்கிழமை (28) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது பற்றி தெரியவருவதாவது-

குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 3ம் ஆண்டில் கல்வி கற்று வரும் 8 வயது சிறுவன் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த சிறுவனின் பெற்றோரிடம் ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து குறித்த சிறுவனின் தந்தையார் மகன் மீது கோபங் கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை (26) மகனை பிடித்து இரும்பு கம்பியை சூடாக்கி அவரது வாயில் செங்குத்தாக சூடு வைத்துள்ளார்.

இவ்வாறு சிறுவனுக்கு நடந்த கொடூரம் அந்த பகுதி கிராம உத்தியோகத்தருக்கு தெரிய வந்த நிலையில் அவர் பொலிசாருக்கு பொலிசார் சம்பவ தினமான இன்று வியாழக்கிழமை (28) முறைப்பாடு செய்தார்.

இதனை தொடர்ந்து பொலிசார் சிறுவனுக்கு சூடு வைத்த சிறுவனின் தந்தையாரை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்தனர்

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

யாழில் பாடசாலை மாணவி ஏழரை மாத கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் கைது!

யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக அடையாளம்...

ஈரான் மீதான சமீபத்திய அமெரிக்க தாக்குதலின் பின்னணி இதுதான்!

ஈரானில் அமெரிக்கப் படைகளுக்கும், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கடல்வழிப் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக...

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்