“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

Date:

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார். ‘நாகினி’ தொடரில் நாகினியாக நடித்​துப் புகழ்​பெற்ற இவர், துபாய் தொழில​திபர் சுராஜ் நம்பியார் என்​பவரைக் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திரு​மணம் செய்​து​கொண்​டார். இந்​நிலை​யில் சில நாட்​களுக்கு முன் மவுனி ராய், தனது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் சுராஜ் நம்பியார் புகைப்​படங்​களை நீக்​கி​னார்.

இதனால் இரு​வரும் பிரிவ​தாகச் செய்​தி​கள் வெளி​யானது. இந்​நிலை​யில் தாங்​கள் பிரிவதை மவுனி ராயும் சுராஜ் நம்​பி​யாரும் அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​துள்​ளனர். அவர்​கள் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “நாங்​கள் பிரிந்து செல்ல முடிவு செய்​துள்​ளோம். இந்த விஷ​யங்​களைத் தனிப்​பட்ட முறை​யிலும் சுமுக​மாக​வும் கையாள்​வதற்​குக் கூடு​தல் கால அவகாசம் எடுத்​துக்​கொள்​கிறோம் என்​ப​தைத் தெளிவுபடுத்த விரும்​பு​கிறோம்.

எங்​களைப் பற்​றிய கற்​பனை​யான கதைகள் மற்​றும் அப்பட்டமான பொய்​களைப் பரப்​புவதன் மூலம் எங்​களது தனிப்பட்ட வாழ்க்​கை​யைப் பரபரப்​பாக்க முயற்​சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆழமான சிந்​தனைக்​குப் பிறகே பரஸ்பர மரி​யாதை மற்​றும் புரிதலுடன் தனித்​தனி பாதைகளில் முன்​னோக்​கிச் செல்ல முடி​வெடுத்​துள்​ளோம். வரும் காலங்களிலும் எங்​களது நட்​பைப் போற்​று​வதற்கு முயற்சிப்போம். உங்​களது புரிதலுக்​கும், எங்​களது தனிப்​பட்ட சுதந்​திரத்​துக்கு நீங்​கள் அளிக்​கும் மரி​யாதைக்​கும் நன்​றி” என்று தெரி​வித்​துள்​ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...

யாழில் நிறைபோதையில் அட்டகாசம் செய்த இளைஞன்!

யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர்...

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்