வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை வயல் பகுதிக்கு சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் உயிரிழந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வாகனேரி குளத்துமடுவைச் சேர்ந்த 46 வயதுடைய செல்லத்துரை கோபால் என்ற விவசாயியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த விவசாயி மழை பெய்து வரும் நிலையில் வயலுக்கு சென்றவர் நேரமாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடிய போது கால்வாயில் சடலமாக கிடப்பதை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-க.சரவணன்-



