அவசரமாக டெல்லி விரைந்தார் விசிக தலைவர் திருமாவளவன்: காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, வேணுகோபாலை சந்திக்க திட்டம்

Date:

தமிழகத்​தின் புதிய ஆட்சி அமைந்த சூழலில், விசிக தலை​வர் திரு​மாவளவன் திடீரென டெல்​லிக்கு சென்​றுள்ள தகவல், தமிழக அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்​றும் கே.சி. வேணுகோ​பாலை அவர் சந்​திக்க உள்​ள​தாக தெரி​கிறது.

இதுகுறித்து அரசி​யல் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 108 இடங்​களை வென்ற ‘தவெக’ தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​தா​லும், பெரும்​பான்மை இல்​லாத காரணத்​தால் காங்​கிரஸ் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் ஆதரவை பெற்​றது. நீண்ட இழுபறிக்கு பிறகு விசிக தனது ஆதரவை வழங்​கியது.

முன்​ன​தாக நடந்த விசிக நிர்​வாகி​கள் கூட்​டத்​தில், “தி​முக கூட்​ட​ணி​யில் உரிய அங்​கீ​காரம் கிடைக்​க​வில்​லை; எனவே, தவெக-​விடம் துணை முதல்​வர் பதவி மற்​றும் காலி​யாகும் திருச்சி கிழக்கு தொகு​தி​யைப் பெற வேண்​டும்” என ஒரு தரப்​பினர் அழுத்​தம் கொடுத்​தனர். ஆனால், “பாஜகவை முழு​மை​யாக எதிர்க்​காத தவெக-வுடன் கூட்​டணி வைப்​பது சரி​யாக இருக்​காது” என மற்​றொரு தரப்​பினர் எச்​சரித்​தனர். இறு​தி​யில், குடியரசுத் தலை​வர் ஆட்​சி​யைத் தவிர்க்​கவே ஆதரவு என திரு​மாவளவன் அறி​வித்​தார்.

தற்​போது அதி​முக-​வில் பழனி​சாமிக்​கும், சி.​வி.சண்​முகம் தரப்​புக்​கும் இடையே மோதல் உச்​சகட்​டத்தை எட்​டி​யுள்​ளது. இதன் தொடர்ச்​சி​யாக, சி.​வி. சண்​முகம் தரப்பு 34 அதி​முக எம்​எல்​ஏ-க்​களின் ஆதர​வுக் கடிதத்தை தவெக-வுக்கு வழங்​கத் தயா​ராகி​விட்​ட​தாகத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

லீமாரோஸ் மார்ட்​டின் மூல​மாக ஆதவ் அர்​ஜுனா ஏற்​பாட்​டில் சி.​வி.சண்​முகம் தரப்பு தவெக-வுடன் நெருங்​கு​வது திரு​மாவளவனுக்​குப் பெரும் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ஒரு​வேளை அதி​முக உள்ளே நுழைந்​தால், விசிக வெளி​யேறு​வது குறித்து அக்​கட்சி ஆலோ​சித்து வரு​கிறது.

இதுகுறித்து அகில இந்​திய காங்​கிரஸ் தலை​மைக்​குத் தனது கவலை​யைத் தெரிவிக்​க​வும், தமிழகத்​தின் தற்​போதைய அரசி​யல் சூழலை விளக்​க​வுமே திரு​மாவளவன் டெல்லி சென்​றுள்​ளார். குறிப்​பாக, திமுக-வுக்கு எதி​ரான அரசி​யலை காங்​கிரஸ் மற்​றும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகள் தீவிர​மாக முன்​னெடுக்​கக் கூடாது என அவர் வலி​யுறுத்த உள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. இன்று அல்​லது நாளை நடை​பெறவுள்ள இந்​தச் சந்​திப்​பு, தமிழக அரசி​யலில் புதிய திருப்​பங்​களை ஏற்​படுத்​தும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இவ்​வாறு வட்​டாரங்​கள் தெரிவித்​தன.

இதனிடையே நேற்று முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு 4 முறை அழைப்பு விடுத்தும் திருமாவளவன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்