யாழ் கூட்டுறவு சங்கத்தில் குழப்பம்: பொலிசாரை வெளியேறுமாறு வற்புறுத்திய ஊழியர்!

Date:

யாழ் கூட்டுறவு சங்க ஊழியர்களது பணிப்புறக்கணிப்பில் குழப்பங்களை கட்டுப்படுத்தச் சென்ற பொலிசாரை ‘எமது பிரச்சினைக்கு தீர்வுகாண எம்மால் முடியும். நீங்கள் வெளியேறுங்கள்’ என்று கூறி யாழ் பொலிசாரை கூட்டுறவு உத்தியோகத்தர்கள் இருவர் வெளியேற்றிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.

யாழ் கே.கே.எஸ் வீதி பண்ணை சந்தி பகுதியில் இருக்கும் யாழ் ப. நோ.கூ.சங்க தலைமை அலுவலகம் முன்பாக முகாமையாளரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்த ஊழியர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நீண்ட நேரமாக முன்னெடுக்கப்பட இந்த இழுபறி நிலையையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் பொலிசார் அங்கு சென்றனர்.

இளங்குமரன் MP இரு தரப்பினருடனும் பேச்சுக்களை முன்னெடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்தார்.

ஆனாலும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தோர் அவ்விடத்தை விட்டு அகலாது தொடர்ந்தும் நின்று எதிர்ப்புக் காட்டிவந்ததுடன் உதவி ஊட்டுறவு ஆணையாளரிடமும் செல்ல ஆயத்தமாகி இருந்த நிலையிலேயே கடமையில் இருந்த பொலிசாரை வெளியேறுமாறு வற்புறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்து: 14 உயிர்களை காவுகொண்ட பேரதிர்ச்சி

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்