முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் கடற்தொழிலுக்காக 2 மீனவர்களும் சென்றுள்ளனர்.
எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பிரதேச மீனவர்கள் இணைந்து படகுகளில் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். எனினும், மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.



