இலங்கை கிரிக்கெட் தலைவர், செயற்குழு பதவிவிலக முடிவு!

Date:

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவும், இலங்கை கிரிக்கெட் சபை செயற்குழுவும் இன்று நடைபெற்ற சிறப்புக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து பதவி விலக முடிவு செய்துள்ளனர்.

இந்தப் பதவி விலகலுடன், இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக சில்வாவின் ஏழாண்டு காலப் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து சில்வா பதவி விலகுவார் என்று முன்னதாக வெளியான செய்திகள் தெரிவித்தன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன, இலங்கை கிரிக்கெட்டின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சில்வா, பெப்ரவரி 2019 இல் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல தேர்தல்களில் வெற்றி பெற்று அப்பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு: தவெக பலம் 120 ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது...

15 வயது சிறுமி பாலியல் அடிமையாக்கப்பட்ட குற்றச்சாட்டு: பௌத்த பிக்குவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

அனுராதபுர நீதவான் நீதிமன்றம், கூறப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக,...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்