தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது வாக்குப் பதிவு

Date:

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​திகளி​லும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இவர்களில் 14.59 லட்​சம் பேர் முதல்​முறை வாக்​காளர்​கள்.

தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திற​னாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள் என மொத்​தம் 33,211 இடங்​களில் 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

5,949 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மானவை என்று அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. இங்கு நுண்​பார்​வை​யாளர்​கள், துப்​பாக்​கிய ஏந்திய போலீ​ஸார் அல்​லது துணை ராணுவப் படை​யினர் நிறுத்தப்பட்​டுள்​ளனர்.

அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் குடிநீர், கழி​வறை, தடையற்ற மின்​சா​ரம், அவசர மருத்​து​வம், கைப்​பிடி​யுடன் கூடிய சாய்​வுதளம், மாற்​றுத் திற​னாளி​களுக்கு சக்கர நாற்​காலி, நிழற்​பந்​தல், வாக்காளர்​களுக்கு உதவ தன்​னார்​வலர்​கள் ஏற்​பாடு என அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ளன.

வாக்​குச்​சாவடிக்​குள் செல்​போன் கொண்​டு​செல்ல அனு​மதி இல்லை என்​ப​தால், நுழைவு​வாயி​லில் செல்​போனை பாது​காப்​பாக வைக்​க​வும் முதல்​முறை​யாக வசதி செய்​யப்​பட்​டுள்​ளது.

இத்​தேர்​தலில் 1,06,408 வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்படுத்​தப்​படு​கின்​றன. கூடு​தலாக 20 சதவீத இயந்​திரங்​கள் தயார் நிலை​யில் உள்​ளன.

துணை ராணுவம் ரோந்து: பாது​காப்பு பணி​யில் துப்​பாக்கி ஏந்​திய 300 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்கள் 24 மணி நேர​மும் தீவிர ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்டு வருகின்​றனர்.

மேலும் 83,875 காவல் துறை பணி​யாளர்​கள், 40,427 காவல் துறை அல்​லாத முன்​னாள் ராணுவத்​தினர் உள்​ளிட்ட பணி​யாளர்​களும் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

வாக்​குச்​சாவடி பணி​யில் சுமார் 3.40 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​கள் ஈடு​பட்​டுள்​ளனர். தேர்​தல் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளவர்களில் நேற்று வரை 4.18 லட்​சம் பேர் தபால் வாக்​கு​களை பதிவு செய்​துள்​ளனர். வாக்​குச்​சாவடிகளுக்கு வாக்​குப்​ப​திவு இயந்திரங்​களை அனுப்​பும் பணி நேற்று காலை 11 மணி முதல் தொடங்​கியது.

அதனுடன் உரிய படிவங்​கள், சீல் வைக்க தேவை​யான அரக்​கு, மெழுகு​வத்​தி, அழி​யாத அடை​யாள மை உள்​ளிட்ட பொருட்​களும் அனுப்பி வைக்​கப்​பட்​டன. சென்னையில் தேர்தல் ​பணி​களை, 10 நாடு​களைச் சேர்ந்த 20 பிர​தி​நி​தி​கள் கொண்ட சர்​வ​தேசக் குழு​வினர் நேற்று பார்​வை​யிட்​டனர்.

வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்​குச்​சாவடிகளின் உள்ளே மற்​றும் வெளியே தலா ஒரு கண்​காணிப்பு கேமரா என மொத்​தம் 1.50 லட்சம் கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன.

தமிழகம் முழு​வதும் பதி​வாகும் கேமரா காட்​சிப் பதிவு​களை, சென்​னை​யில் உள்ள தலை​மைத் தேர்​தல் அதி​காரி அலு​வல​கத்​தில் இருந்து மாவட்ட வரு​வாய் அலு​வலர் நிலை​யில் உள்ள 18 அதிகாரி​கள் கொண்ட குழு​வினர் கண்​காணிப்​பார்​கள் என்று தலைமைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​தார்.

சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று மேலும் கூறியபோது, ‘‘தேர்​தல் பறக்​கும் படைகள், நிலைக் கண்​காணிப்பு குழுக்​கள் மூலம் இது​வரை ரூ.1,262 கோடி பறி​முதல் செய்யப்பட்டுள்​ளது. வாக்​குச்​சாவடி அமை​விடம் உள்​ளிட்ட பல்​வேறு தகவல்​களை https://votervazhikatti.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். மாலை 6 மணி வரை வாக்​குப்​ப​திவு தொடர்ந்து நடை​பெறும்.

வாக்​குப்​ப​திவு முடிந்​ததும், வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தமிழகம் முழு​வதும் 63 இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்​களில் பாது​காப்​பாக வைக்​கப்​படும்’’ என்​றார்.

தேர்​தலை​யொட்​டி, தமிழகம் முழு​வதும் அரசு, தனி​யார், பொதுத் துறை நிறு​வனங்​களுக்கு இன்று பொது விடு​முறை விடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க கடற்படை செயலாளர் பதவி நீக்கம்

அமெரிக்க கடற்படைச் செயலாளர் ஜான் பீலன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் பணிநீக்கம்...

திருவான்மியூர் வாக்குச் சாவடியில் முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்