முன்னாள் எம்.பி பிரேமலால் ஜயசேகர கைது

Date:

இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர (சொக்கா மல்லி), அனுமதிப்பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் நுவரெலியா பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப உறவினர்களுடன் நுவரெலியாவுக்கு சென்றிருந்த பிரேமலால் ஜயசேகரவுக்கும், அவிசாவளையிலிருந்து அங்கு சுற்றுலா வந்திருந்த ஒரு குழுவினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பிரேமலால் ஜயசேகர தனது கைத்துப்பாக்கியைக் காட்டி அந்தத் தரப்பினரை அச்சுறுத்தியதாக நுவரெலியா பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ரவீந்திர பிரேமலால் உள்ளிட்ட அதிகாரிகள் அவரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கிக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் 2025ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்