புதுச்சேரி உள்விவகாரங்களில் தலையிட்டாரா இலங்கைத் தூதரக அதிகாரி?

Date:

புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதித் தூதரக அதிகாரி கணேசநாதன் கேதீஸ்வரன், புதுச்சேரியின் உள் விவகாரங்களில் தலையிடுவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா குற்றம் சாட்டியுள்ளார்.

“புதுச்சேரியின் வைத்திக்குப்பம் பகுதியில் உள்ள மீனவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக, தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதித் தூதரக அதிகாரி கணேசநாதன் கேதீஸ்வரன், இலட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினால் அழைக்கப்பட்டிருந்தார்.

பாஜகவின் புதுச்சேரி தலைவரும், அவர்களின் ராஜ்பவன் தொகுதி வேட்பாளருமான வி. பி. ராமலிங்கமும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

“வெளிநாட்டுத் தூதர்கள் அந்த நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற கடமையைக் கொண்டுள்ளனர்” என்று கூறும் 1961 வியன்னா தூதரக உறவுகள் உடன்படிக்கையின் கடுமையான மீறலாக இது உள்ளது.”

” “இந்தியாவும் இலங்கையும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன,” என்று கேரா X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையம் அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா என்றும், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதுகுறித்து ராஜதந்திர ரீதியான பதில் அளிப்பாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் சைவசித்தாந்த பட்டப்படிப்புகளை ஆரம்பிக்கும் தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம்

சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்தப்புலவர், பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா யாழ் மண்ணில் ஆரம்பித்து...

கொத்துப் போட பிந்தியதால் உணவக ஊழியர் மீது தாக்குதல்!

மட்டக்களப்பு அரசடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள இரவு உணவகம்...

புதையல் தோண்டிய பிரதேச செயலக கணக்காளர் உள்ளிட்ட 9 பேர் கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலையம் ஒன்றிற்கு அருகாமையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்