இயக்கச்சியில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

Date:

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இயக்கச்சியில் உள்ள நான்காவது இலங்கை இராணுவ முகாம் அமைந்துள்ள காணியானது 17 பொது மக்களுக்கு சொந்தமானது. எனவே குறித்த காணியினை இராணுவ முகாமுக்கு சுவீகரிக்கும் அரசின் முயற்சியை எதிர்த்து பொது மக்களால் இன்று
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காணியுரிமையாளர்கள் இராணுவம் மற்றும் ஆளும் தரப்புக்கும் எதிராக பல பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்

அதன் தொடர்ச்சியாக பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க, இந்தநில அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் நில உரிமையாளர்கள்
தங்கள் நிலங்களை இழக்க நேரிடும் என்று கூறி குறித்த நில அளவீட்டு பணியினை தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குறித்த மக்கள் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர்கள் செ. கஜேந்திரன், மு.சந்திரகுமார், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக
செயற்பாட்டாளர்கள், காணியுரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சட்டத்தரணியின் அடிப்படை உரிமைகளை மீறியதால் ரூ.60,000 இழப்பீடு வழங்க பொலிஸ் பேச்சாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2017 ஆம் ஆண்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தின்...

பாடசாலைகளில் உடல்ரீதியான தண்டனைக்கு தடை: கல்வி அமைச்சு உத்தரவு!

மாணவர்களுக்கு உடல்ரீதியான தண்டனை அளிப்பதும், எந்த விதமான உடல் அல்லது மனரீதியான...

உலகக் கோப்பை தகுதி சுற்றில் போஸ்னியாவிடம் தோல்வி: 3வது முறையாக இத்தாலி வெளியேற்றம்

பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்