கொளத்தூரில் மு.க.ஸ்டாலின், பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல்

Date:

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்யும் இன்று (மார்ச் 30) வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அதன்படி, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று மனுத்தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் இருந்தனர். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்யும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்தத் தொகுதியில் தவெக சார்பில் விஜய், திமுக சார்பில் ஆர்.டி.சேகர், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவின் சார்பில் ம.திலகபாமா, நாதகவின் வெற்றித்தமிழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தவிர்த்து, திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன், நாதக சார்பில் சவுந்திர பாண்டியன், தவெக சார்பில் வி.எஸ்.பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் 2011-ம் ஆண்டு முதல் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கைதிலிருந்து தப்பிக்க நீதிமன்றம் சென்ற டிஐஜி வருண ஜெயசுந்தர

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் தொடர்பாக,...

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல்...

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்