65 லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 2 மாத சிறை!

Date:

பெற்றோல் விற்பனை செய்வதற்கான முறையான அனுமதிப்பத்திரம் இன்றி, லொறி ஒன்றில் 65 லீட்டர் பெற்றோலை வைத்திருந்த நபருக்கு 2,500 ரூபாய் அபராதமும் 2 மாத கால கட்டாயச் சிறைத் தண்டனையும் விதித்து கல்கிசை நீதவான் பசான் அமரசேன நேற்று (19) உத்தரவிட்டார்.

கல்கிசை, படோவிட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இருந்து அதிகளவு எரிபொருளைப் பெற்றுக்கொண்டதாக வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (18) இரவு அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், லொறியில் இருந்த 4 எரிபொருள் கலன்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட எரிபொருளின் மொத்த மதிப்பு சுமார் 20,000 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழ் பல்கலை கலைப்பீடாதிபதியாக பிரதீபராஜா தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்....

ஈரான் IRGC பிரிவின் உயர் தளபதிகள் பலர் பலி

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையில் (IRGC) உள்ள பல ஈரானிய...

ஈரான் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்: ஜனாதிபதி விளக்கம்!

ஈரான் போர்க்கப்பலுக்கு இலங்கை துறைமுகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பதை ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்