ஈரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் தேனா மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை உள் கேபிள் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் 6 திகதியிட்ட அந்த கேபிள், தேனாவில் இருந்து தப்பியவர்களையும், தற்போது இலங்கையின் காவலில் உள்ள இரண்டாவது ஈரானிய கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேரின் பணியாளர்களையும் ஈரானுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அதிகாரிகளுக்கு தெரிவித்ததாகக் கூறியது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மாலுமிகளை யுத்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்த ஈரான் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் இலங்கை குறைக்க வேண்டும் என்று அது குறிப்பிட்டது.



