‘தனுஷ் சார் ஒரு கலைக்கூடம்’ – மிருணாள் தாகூர் புகழாரம்

Date:

தனுஷ் சார் ஒரு கலைக்கூடம் என்று மிருணாள் தாகூர் அளித்த பேட்டியில் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் காதலிக்கிறார்கள், திருமணம் செய்யவுள்ளனர் என்று இணையத்தில் கடந்த சில மாதங்களாகே வதந்திகள் பரவி வந்தன. இதற்கு மிருணாள் தாகூர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.

தற்போது இந்திப் படமொன்றின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார் மிருணாள் தாகூர். அவரிடம் தனுஷ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மிருணாள் தாகூர், “’தேரே இஸ்க் மெயின்’ இந்திப் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் சார் இருக்கும் போது, அவரை ‘சன் ஆஃப் சர்தார் 2’ ப்ரீமியர் காட்சிக்கு வருமாறு கேட்டேன். அவர் வருவார் என்று நினைக்கவில்லை. ஆனால், அவர் வந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

தனுஷ் சாரின் ‘மாரி’, ’ராயன்’, ‘ராஞ்சனா’, ’கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட படங்களை பார்த்த பின்பு அவருடைய ரசிகையாகவே மாறிவிட்டேன். அவரது ‘அசுரன்’ படத்தை பலமுறை பார்த்துள்ளேன். தனுஷ் சார் ஒரு கலைக்கூடம் போன்றவர். ஒரு நடிகராக அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் மிருணாள் தாகூர்.

spot_imgspot_img

More like this
Related

போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ் – தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்

விருதுநகரில் போலியோ சொட்டு மருந்து முகாமில் ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு போலியோ...

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் புவியரசு மறைவு

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான...

புதிய கடற்படை தளபதியாக தமியன் பெர்னாண்டோ நியமனம்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ரியர் அட்மிரல் தமியன் பெர்னாண்டோவை இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்