எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாது என்றும் போதுமான அளவு இருப்பு உள்ளது என்றும் லிட்ரோ ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தேவையற்ற கொள்முதல்களைச் செய்து பீதி அடைய வேண்டாம் என்றும் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கேட்டுக்கொள்கிறது.
பெப்ரவரி 14, 2026 முதல் எதிர்பாராத விதமாக எரிவாயு தேவை அதிகரித்ததும், இரண்டு நாள் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கலும் கடந்த சில நாட்களில் எரிவாயு பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாகவும் நிறுவனம் கூறுகிறது.
பெப்ரவரி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் 284,000 சமையல் எரிவாயு நிரப்பு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்பட்டன. நேற்று (19) முதல் சனிக்கிழமை வரை மேலும் 351,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறுகிறது.
வரவிருக்கும் காலத்திற்குத் தேவையான எரிவாயு இருப்புக்கான ஓர்டர்கள் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளன. லிட்ரோ தலைவர் சன்ன குணவர்தன கையொப்பமிட்ட அறிக்கையில், விநியோகத்தை மேலும் உறுதிப்படுத்த இந்த மாத இறுதிக்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வர உள்ளன என்று மேலும் கூறுகிறது.



