நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு வெலிசரவில் சிறைச்சாலையை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 54) பிரிவு 2 ஆல் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.




