உழைப்புக்கு உரிய அங்கீகாரம் இல்லையா? – விஜய்யின் காரை மறித்து நியாயம் கேட்ட பெண் நிர்வாகி

Date:

தனக்கு மாவட்​டச் செய​லா​ளர் பதவி வழங்​காத​தால் அதிருப்​தி​யில் தவெக தலை​வர் விஜய்​யின் காரை பெண் நிர்​வாகி ஒரு​வர் தனது ஆதர​வாளர்​களு​டன் வழிமறித்த சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தவெக-​வில் ஏற்​கெனவே 120 மாவட்​டச் செய​லா​ளர்​கள் அறிவிக்​கப்​பட்​டனர். இருப்​பினும் தூத்​துக்​குடி உட்பட சில மாவட்ட தொகு​தி​களுக்​கான மாவட்​டச் செய​லா​ளர் மற்​றும் நிர்​வாகி​கள் நியமனம் அறிவிக்​கப்​ப​டா​மல் இருந்​தது. இதை​யொட்டி மீத​முள்ள மாவட்​டங்​களுக்​கான மாவட்​டச் செய​லா​ளர்​களை அறிவிக்​கும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சி தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. கட்சி தலை​வர் விஜய் தலைமை வகித்து புதிய மாவட்​டச் செய​லா​ளர்​களுக்கு அறி​விப்​பாணை​களை வழங்​கி​னார்.

இதை​யொட்டி கட்சி நிர்​வாகி​கள் காலை முதலே பனையூரில் திரளாக குவிந்​தனர். இதற்​கிடையே தூத்​துக்​குடி மத்​திய மாவட்​டச் செய​லா​ள​ராக சாமுவேல் என்​பவர் நியமிக்​கப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யானது. அந்​தப் பதவி தனக்கு வழங்​கப்​படும் என எதிர்ப்​பார்த்து காத்​திருந்த பெண் நிர்​வாகி​யான அஜிதா ஆக்​னல், பட்​டியலில் தன் பெயர் இல்​லாத​தால் அதிருப்​தி​யில் தனது ஆதர​வாளர்​களு​டன் கட்சி அலு​வல​கத்​துக்கு வந்து விஜய்யை சந்​தித்து பேச முற்​பட்​டார்.

ஆனால், பாது​காப்பு பணி​யில் இருந்​தவர்​கள் அவர்​களை உள்ளே செல்ல அனு​ம​திக்​க​வில்​லை. கட்​சி​யின் நீண்ட காலம் உழைத்​தவர் களுக்கு உரிய அங்​கீ​காரம் வழங்​கப்​பட​வில்லை என நிர்​வாகி அஜிதா கண்​ணீர் மல்க தனது அதிருப்​தியை வெளிப்​படுத்​தி​னார். தொடர்ந்து பனையூர் அலு​வல​கத்​துக்கு வருகை தந்த விஜய்​யின் காரை ஆதர​வாளர்​களு​டன் வழிமறித்து அவரிடம் பேச முற்​பட்​டார். இதனால் பரபரப்பு ஏற்​பட்​டது. உடனடி​யாக அவரை பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தவர்​கள் அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தினர். எனினும் கட்சி அலுவலகம் முன்பு அஜிதா தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

பின்​னர், கட்​சி​யின் இணை பொதுச்​செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் அஜி​தாவுடன் பேச்​சு​வார்த்தை நடத்தி விஜய்​யிடம் பேசிக்​கொள்​ளலாம் எனச் சொல்லி அனுப்பி வைத்​தார். இதுதொடர்​பாக செய்​தி​யாளர்​களிடம் நிர்​மல்​கு​மார் கூறிய​தாவது:

கட்​சி​யில் பொறுப்​பு​கள் வழங்​கும் போது ஒரு சில இடங்​களில் அதிருப்தி வரு​வது இயல்​பு​தான். இது எல்லா கட்​சிகளி​லும் இருக்​கக் கூடியது தான். கடந்த வாரம் கூட திமுக முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வர் முதல்​வரை பார்க்க முடி​யாத​தால், அறி​வால​யத்​தின் வெளியே தனது உறுப்​பினர் அட்​டையை தூக்கி எறிந்​து​விட்​டுச் சென்​றார்.

இவ்​வாறு கட்​சிகளில் ஒவ்​வொருத்​தருக்​கும் ஒரு மனவ​ருத்​தம் இருக்​கும். திமுக-வை விட தவெக-​வில் ஜனநாயகம் அதி​க​மாக உள்​ளது. அதி​கள​வில் நிர்​வாகி​கள் நியமிக்​கப்பட்​டுள்​ளனர். யார், யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்​டுமோ, கட்சி தலை​வர் முடி​வெடுத்து வழங்கி வரு​கி​றார். கட்​சிக்​காக உழைத்​தவர்​கள் யாரை​யும் விஜய் கைவிட​மாட்​டார். அனை​வரை​யும் அரவணைப்​பார் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

மஹர சிறைக்கலவரத்தில் ஒருவர் பலி

சனிக்கிழமையன்று மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ஒரு கைதி உயிரிழந்ததாகவும்,...

பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தகவல்

ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து...

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுருவிய மொராக்கோ அகதிகள் உணவு இல்லாமல் மீண்டும் நாடு திரும்பினர்

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுரு​விய அகதி​கள் உணவு இல்​லாமல் மீண்​டும் சொந்த நாடான மொராக்​கோவுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்