நாட்டை தொடர்ந்து பாதித்து வரும் கடுமையான வானிலை காரணமாக மொத்தம் 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 25 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 16 ஆம் திகதி தொடங்கிய இந்த மோசமான வானிலை காரணமாக, நாடு முழுவதும் 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், நான்கு வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும், 666 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வடக்கு, வடமத்திய, மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என்றும், வடமேற்கு, சபரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
“நாட்டின் பிற பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்” என்று அது கூறியது.
“நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு 60-70 கிமீ வேகத்திலும், மணிக்கு 80-90 கிமீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்” என்று அது மேலும் கூறியுள்ளது.



