மினிவாங்கொட பகுதியில் உள்ள பழமை வாய்ந்த உணவகம் ஒன்றில் மட்டக்களப்பை சோந்த குழு ஒன்றுக்கு சாப்பிடுவதற்காக வழங்கப்பட்ட மதிய உணவான பிரைட் ரைஸ் உணவில் புழு நெளிந்த சம்பவம் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பிரயாணித்த குழுவொன்று மினுவாங்கொட பகுதியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த உணவகம் ஒன்றில் சம்பவதினமான இன்று புதன்கிழமை வாகனத்தை நிறுத்தி மதிய உணவு உண்பதற்கு பிரைட் ரஸ் உணவை கோரினர்
இதனையடுத்து சாப்பிடுவதற்கு வழங்கப்பட்ட உணவான பிரைட் ரைஸ் உணவில் புழுக்கள் நெளிந்து ஓட தொடங்கியதை கண்டு உணவக உரிமையாளர் கவனத்துக்க கொண்டு வந்ததுடன் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்
இதேவேளை குறித்த உணவகம் அமைந்துள்ள அந்த பிரதான வீதியால் பயணிக்கும் அதிகமான பொதுமக்கள் அந்த உணவகத்தில் உணவருந்துவது குறிப்பிடத்தக்கது.
-கனகராசா சரவணன்-



