நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இன்று (17) மாலை இந்த சம்பவம் நடந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாகி திலீபனின் நினைவஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அங்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர் சந்திரசேகரனை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.




