தனது மனைவி கள்ளக்காதலனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததை நேரில் கண்டதும், விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவன், மருத்துவமனையில் இருந்து திரும்பிய போது, வீட்டில் இருந்த பணம் உட்பட அனைத்து விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு தனது கள்ளக் காதலனுடன் மனைவி ஓடிவிட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண் தனது மகளையும் அழைத்துச் சென்றுள்ளார்.
பஹல நெபடவில் வசிக்கும் 23 வயது நபர் அளித்த புகாரைத் தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அவர் பொலிசார் அளித்த புகாரில், அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும், 27 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் நெபட நகரத்திலுள்ள வீட்டுக்குத் திரும்பியபோது, அவரது மனைவி வேறொருவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும், சந்தேகம் மற்றும் பதட்டம் காரணமாக அவர் விஷம் குடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
களுத்துறையில் உள்ள நாகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 1 ஆம் திகதி காலை 11.00 மணியளவில் வீடு திரும்பியபோது, தனது மனைவி மற்றும் மகள் அங்கு இல்லை என்றும், தனது பணம், தங்க நகைகள் மற்றும் வீட்டுப் பொருட்களை ‘பட்டா’ வகை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதாகவும் அவர் தனது புகாரில் மேலும் தெரிவித்துள்ளார்.
தனது மனைவியின் தொலைபேசிக்கு அழைத்ததாகவும், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை என்றும், தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறி அவள் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அவர் பொலிசாரிடம் கூறியிருந்தார். தனது வணிக நோக்கங்களுக்காக வீட்டில் இருந்த ரூ.290,000 ரொக்கம், ரூ.97,000 மதிப்புள்ள குளிர்சாதன பெட்டி, ரூ.375,000 மதிப்புள்ள தங்க நெக்லஸ், ரூ.625,000 மதிப்புள்ள வளையல், ஒரு அலமாரி, ஒரு டிரஸ்ஸிங் டேபிள், தேசிய அடையாள அட்டை மற்றும் திருமணச் சான்றிதழ் ஆகியவற்றை மனைவி எடுத்துச் சென்றதாக அவர் பொலிசாரிடம் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து தெபுவான காவல் நிலையத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



