18 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

Date:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.

அவர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி வழங்கினார்.

விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும், சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி ஒருவரும் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது உறுப்புரிமையின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் விபரங்கள் கீழே…

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல்

  1. எஸ்.எஸ்.கே. விதான
  2. ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க
  3. ஏ.எம்.எம். ரியால்
  4. திரு. டீ.பீ. முதுங்கொடுவ
  5. எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத்
  6. ஜே. கஜநிதிபாலன்
  7. டி.எம்.டி.சி. பண்டார
  8. எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன
  9. டி.எம்.ஏ. செனவிரத்ன
  10. திரு. ஏ.ஏ. ஆனந்தராஜா
  11. ஜி.என். பெரேரா
  12. ஏ. ஜுட்சன்
  13. திருமதி.டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க
  14. ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிடிய
  15. கே.டி.என்.வி. லங்காபுர,
  16. டி.எம்.ஆர்.டி. திசாநாயக்க
  17. எம்.ஐ.எம். ரிஸ்வி
  18. ஏ. ஜெயலக்ஷி டி சில்வா
spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்