வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்காக லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்காக நீதி கோரியும் செம்மணி படுகொலைகளுக்கு நீதி வேண்டியும் இன்று லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது
ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகரகத்திலிருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரைக்கும் பேரணியாக சென்ற புலம்பெயர் தமிழ் உறவுகள் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
புலம்பெயர் தமிழர்களால் முன்பு எடுக்கப்பட்டிருந்த இந்த போராட்டத்தில் செம்மணிக்கு நீதி கோரியும் இனவழிப்பு அரசாங்கத்திற்கு தண்டனை வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது
இதில் பெருந்திரளான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தமது எதிர்ப்பை முன் வைத்திருந்தனர்



