பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், நேற்று முன்தினம் (05) இரவு தனது பேஸ்புக் கணக்கில் இருந்து பொலிஸ் சீருடை அணிந்திருந்த முக்கிய படத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக டை கோட் அணிந்திருந்த புகைப்படத்தை இணைத்துள்ளார்.
தனது பேஸ்புக் கணக்கில் தனிப்பட்ட தகவல்களின் கீழ் தனது பதவிகளின் அனைத்து விவரங்களையும் நீக்கியுள்ளார்.
கடந்த பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் சுமார் 06 மாதங்கள் செயல்படாமல் இருந்த அவரது பேஸ்புக் கணக்கு நேற்று முன்தினம் (05) இரவு முதல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது




