முறைகேடு செய்த சட்டத்தரணி தகுதி நீக்கம்!

Date:

2023 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவேட்டை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு சட்டத்தரணியை பதவியில் இருந்து நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிவு அறையில் உள்ள வழக்கு பதிவேட்டில் இருந்து இரண்டு பக்கங்களை கிழித்து எறிந்ததாக சட்டத்தரணி தர்மசிறி கருணாரத்ன கண்டறியப்பட்டு, மோசடி மற்றும் முறைகேடு செய்ததாக அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.

நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ச்டத்தரணிகள் பதிவேட்டில் இருந்து உடனடியாக நீக்க உத்தரவை அமல்படுத்துமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, நீதிபதிகள் குமுதினி விக்ரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிவு அறைக்குள் நுழைய சட்டத்தரணி தவறான பெயரைப் பயன்படுத்தியதாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்ற பதிவாளரால் பல குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த சட்டத்தரணி, தான் நிரபராதி என்று வாதிட்ட போதிலும், அவர் முறைகேடு செய்ததாகவும், சட்டத்தரணியாக நீடிக்க தகுதியற்றவர் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்