கேகாலை சிறை சிறப்பு அறையில் முன்னாள் கடற்படைத்தளபதி

Date:

பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி ஓய்வுபெற்ற அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கேகாலை சிறைச்சாலையில் உள்ள ஒரு சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் சுமார் 15 கைதிகள் அந்த அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் கடற்படைத் தளபதியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவரை இந்த அறைக்கு மாற்ற சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடற்படை புலனாய்வு இயக்குநராக இருந்த காலத்தில் பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவ விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினரால் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நேற்று முன்தினம் (28) கைது செய்யப்பட்டு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இன்று (30) அடையாள அணிவகுப்புக்காக அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘வாயை மூடிப் பேசவும்’: தமிழரசின் சித்திரை புத்தாண்டு தீர்மானம் இதுதான்!

சித்திரை புத்தாண்டில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய...

மீனவரை சித்திரவதை செய்த கடற்படை மீது நடவடிக்கை இல்லையா?

கடற்படையினரால் கணவரான மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம்...

புகையிரதம் மோதி ரஷ்ய யுவதி பலி

பெலியத்தாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியதில் 23...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்