கேகாலை சிறை சிறப்பு அறையில் முன்னாள் கடற்படைத்தளபதி

Date:

பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி ஓய்வுபெற்ற அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கேகாலை சிறைச்சாலையில் உள்ள ஒரு சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் சுமார் 15 கைதிகள் அந்த அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் கடற்படைத் தளபதியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவரை இந்த அறைக்கு மாற்ற சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடற்படை புலனாய்வு இயக்குநராக இருந்த காலத்தில் பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவ விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினரால் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நேற்று முன்தினம் (28) கைது செய்யப்பட்டு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இன்று (30) அடையாள அணிவகுப்புக்காக அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி மைத்திரிக்கு முன்னரே தெரியும்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே...

முக்கிய பல ஊழல் வழக்குகள் இந்த வருடம் விசாரிக்கப்படும்!

ஊழல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்