தனது 12 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பதுரலிய காவல்துறையினரால் ஒரு தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுரலிய மொல்காவ பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது கடவத்தை குழந்தைகள் மையத்தில் சிறுமி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 14 ஆம் திகதி குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக புலனாய்வுப் பணியகத்தால் பெறப்பட்ட வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
தனது தாயின் அறிவுறுத்தல் படி பலருடன் உடலுறவு கொண்டதாகவும், அவர்கள் கொடுத்த பணத்தை தாயிடம் கொடுத்ததாகவும் சிறுமி கூறியிருந்தார்.




