பெயர், ஊர் தெரியாத ரிக்ரொக் காதலனால் கர்ப்பமான 15 வயது சிறுமி!

Date:

ரிக்ரொக் மூலம் அடையாளம் காணப்பட்ட பெயரோ, முகவரியோ தெரியாத காதலன் மூலம், 15 வயது சிறுமி கர்ப்பமாக்கிய சம்பவம் குறித்து வடக்கு களுத்துறை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடக்கு களுத்துறை காவல் பிரிவில் வசிக்கும் 15 வயதான சிறுமி, ஜனவரி மாதம் ரிக்ரொக் மூலம் ஒருவரை அடையாளம் கண்டுள்ளார். அந்த இளைஞன், பெப்ரவரி  மாதம் தனது வீட்டிற்கு வந்து, இருவரும் காதல் உறவில் இருப்பதாகவும், அதற்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்ததாகவும் தனது பெற்றோரிடம் பேசியதாகவும், அவர் தனது வீட்டில் இரவைக் கழித்ததாகவும் சிறுமி கூறியதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கடந்த 10 ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக தனது தந்தையுடன் ஹொரணை ஆதார மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த ரிக்ரொக் காதலனின் முழுப் பெயரோ முகவரியோ தனக்குத் தெரியாது என்று சிறுமி போலீசாரிடம் கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்