சாவகச்சேரி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பாலிதசெனவிரத்னவின் வழிகாட்டலின் கீழ் செயற்பட்டுவரும் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் தொடர் வேட்டையில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் சிக்கிவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றி வந்த டிப்பரை மறித்தபோது தப்பி ஓடிய டிப்பரை துரத்திச்சென்று பிடித்ததுடன் மேலும் 2 டிப்பர்களை கைப்பற்றி சாரதிகளுக்கு எதிராக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு சாரதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



