வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பாபு தேவ நந்தினி தலைமையில் இன்று இடம்பெற்றது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் 4 பேரும் ஈபிடிபியின் சார்பில் 2பேரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் 2 பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 6 பேரும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 1 வரும் சுயேச்சை குழுவின் சார்பில் ஒருவருமாக 26 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
சண்முகநாதன் ஜெயந்தனின் பெயர் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்டது இதேவேளை தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சுப்பிரமணியம் தரமலிங்கம் நந்தகுமார் என்பவரது பெயர் முன்மொழியப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பகிரங்க வாக்கெடுப்பு நடாத்துவதா அல்லது இரகசிய வாக்கெடுப்பு நடாத்துவதா என வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன் பொழுது பகிரங்க வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 18 நாக்குகளும் இரகசிய வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 8 பேரும் ஆதரவு வழங்கினர்.
இதன் பொழுது பகிரங்க வாக்கெடுப்பில் சண்முகநாதன் ஜெயந்தனுக்கு ஆதரவாக 15 வாக்குகளும் நந்தகுமாருக்கு ஆதரவாக 7 வாக்குகளும் பெற்ற நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் சண்முகநாதன் ஜெயந்தன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ச்சியாக சங்கு தமிழ் தேசிய பேரவையின் சார்பில் உபதவிசாளராக வேலையா சச்சிதானந்தனும் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் கந்தையா இலங்கேஸ்வரனின் பெயர் முன்மொழியப்பட்டது. இந்நிலையில் கந்தையா இலங்கேஸ்வரன் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.



