வான் வழி.. மொசாட் நாசவேலை தாக்குதல்கள்: ஈரானின் இராணுவத்தலைமையை முற்றாக முடக்கியது இஸ்ரேல்?

Date:

ஈரான் மீது இன்று (13) அதிகாலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானின் இராணுவ முடிவுகளை எடுக்கவல்ல உயர்பீடத்தை முடக்கியுள்ளதாக தோன்றுகிறது.

இன்றைய தாக்குதலில் ஈரானின் உயர் தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இராணுவ வானொலி, வான்வழித் தாக்குதல்களுக்கு மேலதிகமாக… இஸ்ரேலிய மொசாட், வெளி உளவுத்துறை, ஈரானுக்குள் சில நாசவேலை நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் கூறுகிறது.

ஈரானின் புரட்சிகர காவல்படையின் உயர்மட்டத் தலைவரின் படுகொலையைப் பற்றி மட்டுமல்லாமல், முக்கிய கல்வியாளர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகளுக்கு மேலதிகமாக மிகப் பெரிய எண்ணிக்கையிலான மூத்த இராணுவத் தளபதிகள் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இஸ்ரேலிய ஊடகங்களில் பல அறிக்கைகள் மற்றும் கசிவுகள் உள்ளன.

இது மிகப் பெரிய அளவிலான தாக்குதலாகும். ஈரானின் இராணுவ முடிவுகளை எடுக்கவல்ல தளபதிகள் கிட்டத்தட்ட அகற்றப்பட்டுள்ளது போல தோன்றுகிறது.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைவரான மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி, IRGC தலைமையகம் மீதான இஸ்ரேலிய ஆட்சியின் தாக்குதலில் தியாகியாகினார்” என்று உள்ளூர் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல்படை, நாட்டின் இறையாட்சிக்குள் உள்ள முக்கிய அதிகார மையங்களில் ஒன்றாகும். இது ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் ஆயுதக் களஞ்சியத்தையும் கட்டுப்படுத்துகிறது.

சலாமியைத் தவிர, ஈரானின் இராணுவத் தலைவர் முகமது பகேரி, இராணுவத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் மூத்த அணு விஞ்ஞானிகள் ஈரான் மீதான தொடக்கத் தாக்குதல்களில் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் நம்புகிறது.

spot_imgspot_img

More like this
Related

டெங்கு தொடர்பான தகவல்களுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவுவது தொடர்பான அனைத்து அவசரத்...

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் கைது

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, தேசிய அபிவிருத்தி லொத்தர்...

வனாத்தவில்லுவில் ஏரியில் மூழ்கி 4 மாணவர்கள் பலி

வனாத்தவில்லு பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்