இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் ரூ. 04 மில்லியன் பணத்துடன் மூன்று சந்தேக நபர்களை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்துள்ளது.
சந்தேக நபர்களில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவரும் அடங்குவதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடத்திய சிறப்பு சோதனையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.




